அநீதி ? கடவுளின் பிழை ?

Vasundhara வாழ்க்கை Leave a Comment

அநீதி ? கடவுளின் பிழை ? சில சமயம் இந்த உலகில் அநீதி நேரிடுகிறது. காரணமின்றி சிலர் நம்மை சீர் கெட்ட முறையில் நடத்துகின்றனர். அல்லது அறிவுக்கு ஏற்காத சம்பவம் நிகழ்கிறது. அல்லது கொடூகரமான நிகழ்ச்சி நடக்கிறது. நாம் நம்மைக் கேட்கிறோம், “ஏன்? எனக்கு ஏன் இது நிகழ வேண்டும்? நான் ஒன்றும் தவறு செய்யவில்லையே. இந்த முறை பிழை எனதில்லையே.” பதில்களைத் தேடுகிறோம். சில சமயம், பதில் ஒன்றும் கிடைப்பதில்லை. நிகழ்ச்சி நிகழ்கிறது, அதோடு சரி. முதலில் நாம் கடவுளைக் குற்றம் சாட்டுகிறோம். …

Vasundharaஅநீதி ? கடவுளின் பிழை ?

நம்மைப் பற்றியே சிரித்துக் கொள்வது நமக்கு நல்லது தான்

Vasundhara வாழ்க்கை Leave a Comment

நம்மைப் பற்றியே சிரித்துக் கொள்வது நமக்கு நல்லது தான் மற்றவர்களைப் பார்த்து சிரிப்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். யாராவது ஒரு சிறிய பிழை செய்தால், அது நம்மை சிரிக்க வைக்கிறது. சில சமயம் நாம் அவர்களை கேலி செய்கிறோம். நம்மில் சிலர் மற்றவர்களின் பிழைகளிலும் தவறுகளிலும் மகிழ்ச்சி கூட அடைகிறோம். இதைப் பற்றி வம்பு பேசி பரப்பி எல்லோருக்கும் தெரிவிக்கிறோம். ஆனால் நம்மைப் பற்றியே சிரித்துக் கொள்வது பற்றி என்ன? நாம் ஒரு முட்டாள்தனமான செயல் செய்வது பற்றி என்ன? அதுவும் நாம் இந்த …

Vasundharaநம்மைப் பற்றியே சிரித்துக் கொள்வது நமக்கு நல்லது தான்

கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை

Vasundhara வாழ்க்கை Leave a Comment

கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை கடவுளை நம்பும் நாடுகளிலும், சமூகங்களிலும், சிறு வயதிலிருந்தே கடவுள் என்றால் பயப்பட வேண்டும் என்ற மரபு இருந்து வருகிறது. யாராவது ஒரு தீமை செய்தால், “அவர் இந்த குற்றம் செய்திருக்க முடியாதே, அவர் கடவுளை அஞ்சுபவராயிற்றே” என்று மற்றவர்கள் சொல்வார்கள். அதே மூச்சில் அவர்கள், “கடவுள் அன்பின் வடிவம். கருணையே உருவானவர்” என்றும் சொல்வார்கள். கடவுள் அன்பின் வடிவாகவும், கருணையே உருவானவராகவும் இருந்தால், நாம் கடவுளிடம் ஏன் பயப்பட வேண்டும்? நமக்கு ஏற்கனவே தொல்லைகளும் கவலைகளும் இருக்கும்போது, இத்தகைய …

Vasundharaகடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை

எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது…

Vasundhara வாழ்க்கை Leave a Comment

எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது… இந்த கட்டுரையின் இறுதியில் சில படங்கள் உள்ளன. எனக்கு எப்போதுமே பேரம் பேசுவது பிடிக்காது. சிறு வயதிலிருந்தே, நான் இந்த விஷயத்தில் மற்றவரிடமிருந்து வேறுபட்டேன். வியாபாரி கேட்டதை விட குறைவாக தருவேன் என்று சொல்ல எனக்கு அவமானமாக இருந்தது. பொதுவில் பலருக்கு பேரம் பேசுவது என்றால் மிக்க மகிழ்ச்சி! உண்மையில், அவர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு. நமக்கு ஒரு திரைப்படத்துக்கோ, கடற்கரைக்கோ போவது, அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடுவது போல அவர்களுக்கு பேரம் பேசுவது. …

Vasundharaஎளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது…

நன்றியே சிறந்த மனப்பான்மை

Vasundhara வாழ்க்கை Leave a Comment

நன்றியே சிறந்த மனப்பான்மை நாம் அனைவரும் சில சமயம் ஏற்கிறோம், சில சமயம் கொடுக்கிறோம். இப்படி தான் உலக நியதி செல்கிறது. மேலும், சிலர் ஏற்பதை விரும்புகின்றனர், சிலர் கொடுப்பதை விரும்புகின்றனர். இப்படி தான் மனிதர்கள் இருக்கிறார்கள். நமக்கு ஏதாவது தேவைப்படும் போது யாராவது அதை நமக்கு அளித்தால், நாம் மகிழ்கிறோம். சிலர் நாம் கேட்டால் கொடுக்கின்றனர், சிலர் நாம் கேட்காமலே கொடுக்கின்றனர். இந்த இரண்டு விதத்திலும், கொடுப்பவர் சிலர் சந்தோஷப்படுகின்றனர், ஏற்பவர் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். சாதாரணமாக, ஒரு மனிதருக்கு யாராவது ஒரு குடும்பத்தினரோ, …

Vasundharaநன்றியே சிறந்த மனப்பான்மை

மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்

Vasundhara வாழ்க்கை Leave a Comment

மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும் தயாள குணம் ஒருவரது சுய தன்மை என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுடன் ஒத்துக்கொள்கிறேன்.  பணக்காரரோ ஏழையோ, பெண்களோ ஆண்களோ, உலகில் சிலர் பெருந்தன்மை உள்ளவர், சிலர் இல்லாதவர். உண்மை தான். ஆனாலும் நம்மில் தானம், தருமம் தரக் கூடிய பலர் அப்படி செய்யாததற்குக் காரணம் தானத்தைப் பற்றிய தவறான அபிப்ராயம் உள்ளதாலும், மற்றோருக்கு தாராளமாகக் கொடுப்பதால் வரும் நன்மைகளைப் பற்றி அறியாததாலும், குடும்பத்தின் வழக்கப்படி நடப்பதாலும் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். சுருங்கச் சொன்னால், நமக்கு …

Vasundharaமற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்

அழகிய தோற்றம்!

Vasundhara வாழ்க்கை Leave a Comment

அழகிய தோற்றம்! நீங்கள் கட்டாயம் ஒத்துக் கொள்வீர்கள்! பெண்ணோ ஆணோ, நமது  முக்கிய தேவைகள் திருப்தியான பிறகு, நாம் முதலில் விரும்புவது நமது அழகான தோற்றம் தான்!  உண்மை என்னவெனில்,  எந்த இனம், நிறம், உயரம், பருமன் ஆனாலும் எவரும் அழகாக இருக்க முடியும். எவரும் பரிபூரணமாக பிறப்பதில்லை. நமது தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால், அது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.  உட்புறத்திலும் வெளிப்புறத்திலும்,  உடல், மனம் – இவற்றின் முன்னேற்றத்திற்கு  கற்றல் அவசியம். முதலாவதாக, அழகிய …

Vasundharaஅழகிய தோற்றம்!

போலீஸ்காரரிடம் கற்றுக் கொண்ட பாடம்

Vasundhara வாழ்க்கை Leave a Comment

போலீஸ்காரரிடம் கற்றுக் கொண்ட பாடம்! சில வருடங்களுக்கு முன் ஒரு நாள் நான் ஒரு அமைதியான சாலையில் ‘கார்’ செலுத்திக் கொண்டிருந்தேன். காலநிலை சுகமாக இருந்தது. வானொலியில் இசை இனிமையாக இருந்தது. சாலை பெரும்பாலும் காலியாக இருந்தது. உலகத்தில் நான் மட்டும் தான் இருந்தது போல் தோன்றியது. நான் செலுத்திக் கொண்டிருந்த ‘காரும்’ வேக வரையறையை மிகுந்து செலுத்தத் தூண்டிக் கொண்டிருந்தது. நான் வேக எல்லைக்குள் செல்வது தான் வழக்கம். அல்லது போலீஸ்காரர் யாராவது வருகிறார்களா என்று கண்ணாடிகளில் அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பேன்! இந்த …

Vasundharaபோலீஸ்காரரிடம் கற்றுக் கொண்ட பாடம்
We love ourselves

நமக்கு மற்றவர்களை விட நம்மீது தான் அன்பு அதிகம், பின் ஏன்…….

Vasundhara வாழ்க்கை Leave a Comment

எனக்கு இந்த ஆச்சரியத்தில் ஒரு முடிவே இல்லை: நாம் மற்றவைகளை விட நம்மை தான் மிகவும் நேசிக்கிறோம், ஆனால் நமது அபிப்பிராயத்தை விட மற்றவர்களின் அபிப்பிராயத்தில் அதிக நம்பிக்கை வைக்கிறோம். மார்க்கஸ் ஔரேலியஸ் எத்தனை சிந்தனையார்ந்த, விளக்கமான வாக்கியம் ! பல சந்தர்ப்பங்களில் இது உண்மையும் தான், இல்லையா ? நம்மில் பலருக்கு அவர்களது இயல்பான தன்மையிலேயே தன்னம்பிக்கை, மனத்துணிவு போன்ற தன்மைகள் உள்ளன. அவர்களுக்கு எந்த சூழ்நிலையிலும் தைரியமாக தமது முடிவை தாங்களே நிர்ணயித்து செயலில் ஈடுபட முடிகிறது. ஆனால் மற்றும் சிலர் நமது …

Vasundharaநமக்கு மற்றவர்களை விட நம்மீது தான் அன்பு அதிகம், பின் ஏன்…….