மதிப்பு மரம்

Vasundhara மேற்கோள் Leave a Comment

மதிப்பு மரம் வெறுப்பு என்னும் களைகளை வேறோடு நீக்கி, மன்னிப்பு என்னும் தண்ணீர் அளித்து, பெருந்தன்மை என்னும் வெய்யிலில், நட்பு என்னும் விதை விதைத்தால், அதன் பலனாக மதிப்பு என்னும் மரம் வளரும். பின்பு தன்னம்பிக்கை, சுயமரியாதை என்ற கிளைகள் தோன்றி, நல்லெண்ணங்களான இலைகளும் பரவி, மகிழ்ச்சி என்னும் மலர்களும், மன அமைதி என்னும் நறுமணமும், இறையருள் என்னும் கனிகளும் தப்பாது கிடைத்து வரும்.

Vasundharaமதிப்பு மரம்

ஆத்திச் சூடி – உயிர் வருக்கம்

Vasundhara ஆத்திச்சூடி Leave a Comment

ஆத்திச் சூடி – உயிர் வருக்கம் The Tamil Alphabet’s first set of letters are as follows. Each line of this poem starts with one of these letters in this order. அ   ஆ  இ  ஈ  உ  ஊ  எ  ஏ  ஐ  ஒ  ஓ  ஒள ஃ கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. பொருள்: திருவாத்தி மலர் மாலையை அணிந்த தேவனை நாம் …

Vasundharaஆத்திச் சூடி – உயிர் வருக்கம்

தியானம் அறிவு 101 – தியானம் என்றால் என்ன?

Vasundhara ஆன்மீகம், தியானம் Leave a Comment

தியானம் அறிவு 101 – தியானம் என்றால் என்ன? நீங்கள் இங்கு படிப்பதெல்லாம் இந்திய ஆன்ம உபதேசங்களிலிருந்தும், அறிவுரைகளிலிருந்தும் வழங்குவது தான். மற்ற எல்லா விஷயங்களையும் போல முதலில் ஆழ்நிலை தியானம் என்றால் என்ன என்று நாம் கற்க வேண்டும். முதலில் தியானத்தின் நலன்களும் பலன்களும் என்ன என்று அவற்றின் சாராம்சத்தை இங்கு காண்போம். நமது மனநிலை பலமடையும், மேம்படும்.  யாரும் நம்மை எளிதில் கட்டுப்படுத்த முடியாது. உடல்நிலை முன்னேறும், செம்மையுறும். உள்ளிலும் வெளியிலும் அழகு அதிகரிக்கும். உலகின் நடவடிக்கைகளைச் சரியான நோக்கத்துடன் பார்க்கும் …

Vasundharaதியானம் அறிவு 101 – தியானம் என்றால் என்ன?

அநீதி ? கடவுளின் பிழை ?

Vasundhara வாழ்க்கை Leave a Comment

அநீதி ? கடவுளின் பிழை ? சில சமயம் இந்த உலகில் அநீதி நேரிடுகிறது. காரணமின்றி சிலர் நம்மை சீர் கெட்ட முறையில் நடத்துகின்றனர். அல்லது அறிவுக்கு ஏற்காத சம்பவம் நிகழ்கிறது. அல்லது கொடூகரமான நிகழ்ச்சி நடக்கிறது. நாம் நம்மைக் கேட்கிறோம், “ஏன்? எனக்கு ஏன் இது நிகழ வேண்டும்? நான் ஒன்றும் தவறு செய்யவில்லையே. இந்த முறை பிழை எனதில்லையே.” பதில்களைத் தேடுகிறோம். சில சமயம், பதில் ஒன்றும் கிடைப்பதில்லை. நிகழ்ச்சி நிகழ்கிறது, அதோடு சரி. முதலில் நாம் கடவுளைக் குற்றம் சாட்டுகிறோம். …

Vasundharaஅநீதி ? கடவுளின் பிழை ?

நம்மைப் பற்றியே சிரித்துக் கொள்வது நமக்கு நல்லது தான்

Vasundhara வாழ்க்கை Leave a Comment

நம்மைப் பற்றியே சிரித்துக் கொள்வது நமக்கு நல்லது தான் மற்றவர்களைப் பார்த்து சிரிப்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். யாராவது ஒரு சிறிய பிழை செய்தால், அது நம்மை சிரிக்க வைக்கிறது. சில சமயம் நாம் அவர்களை கேலி செய்கிறோம். நம்மில் சிலர் மற்றவர்களின் பிழைகளிலும் தவறுகளிலும் மகிழ்ச்சி கூட அடைகிறோம். இதைப் பற்றி வம்பு பேசி பரப்பி எல்லோருக்கும் தெரிவிக்கிறோம். ஆனால் நம்மைப் பற்றியே சிரித்துக் கொள்வது பற்றி என்ன? நாம் ஒரு முட்டாள்தனமான செயல் செய்வது பற்றி என்ன? அதுவும் நாம் இந்த …

Vasundharaநம்மைப் பற்றியே சிரித்துக் கொள்வது நமக்கு நல்லது தான்

கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை

Vasundhara வாழ்க்கை Leave a Comment

கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை கடவுளை நம்பும் நாடுகளிலும், சமூகங்களிலும், சிறு வயதிலிருந்தே கடவுள் என்றால் பயப்பட வேண்டும் என்ற மரபு இருந்து வருகிறது. யாராவது ஒரு தீமை செய்தால், “அவர் இந்த குற்றம் செய்திருக்க முடியாதே, அவர் கடவுளை அஞ்சுபவராயிற்றே” என்று மற்றவர்கள் சொல்வார்கள். அதே மூச்சில் அவர்கள், “கடவுள் அன்பின் வடிவம். கருணையே உருவானவர்” என்றும் சொல்வார்கள். கடவுள் அன்பின் வடிவாகவும், கருணையே உருவானவராகவும் இருந்தால், நாம் கடவுளிடம் ஏன் பயப்பட வேண்டும்? நமக்கு ஏற்கனவே தொல்லைகளும் கவலைகளும் இருக்கும்போது, இத்தகைய …

Vasundharaகடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை

எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது…

Vasundhara வாழ்க்கை Leave a Comment

எளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது… இந்த கட்டுரையின் இறுதியில் சில படங்கள் உள்ளன. எனக்கு எப்போதுமே பேரம் பேசுவது பிடிக்காது. சிறு வயதிலிருந்தே, நான் இந்த விஷயத்தில் மற்றவரிடமிருந்து வேறுபட்டேன். வியாபாரி கேட்டதை விட குறைவாக தருவேன் என்று சொல்ல எனக்கு அவமானமாக இருந்தது. பொதுவில் பலருக்கு பேரம் பேசுவது என்றால் மிக்க மகிழ்ச்சி! உண்மையில், அவர்கள் இதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு. நமக்கு ஒரு திரைப்படத்துக்கோ, கடற்கரைக்கோ போவது, அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடுவது போல அவர்களுக்கு பேரம் பேசுவது. …

Vasundharaஎளிய விற்பனையாளரிடம் பேரம் பேசுவது…
Don't compel others t

மற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம்

Vasundhara மேற்கோள் Leave a Comment

மற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம் அடிக்கடி நம் கருத்துக்களை மற்றவரின் மீது திணிப்பது ஒரு கெட்ட வழக்கம்; குறிப்பாக அவர்களது தோற்றத்தைப் பற்றி. ஏதாவது ஒரு ஆலோசனை சொல்ல நாம் விரும்பினால், நாம் அதைக் கனிவாக சொல்ல வேண்டும்; மேலும் முடிவை அவர்களிடம் விட்டு விட வேண்டும். இது இருவருக்கும் எளிதாக அமையும், பதற்றத்தைக் குறைக்கும், உறவை முன்னேற்றவும் செய்யும். 

Vasundharaமற்றவரை மிகவும் வற்புறுத்த வேண்டாம்

நன்றியே சிறந்த மனப்பான்மை

Vasundhara வாழ்க்கை Leave a Comment

நன்றியே சிறந்த மனப்பான்மை நாம் அனைவரும் சில சமயம் ஏற்கிறோம், சில சமயம் கொடுக்கிறோம். இப்படி தான் உலக நியதி செல்கிறது. மேலும், சிலர் ஏற்பதை விரும்புகின்றனர், சிலர் கொடுப்பதை விரும்புகின்றனர். இப்படி தான் மனிதர்கள் இருக்கிறார்கள். நமக்கு ஏதாவது தேவைப்படும் போது யாராவது அதை நமக்கு அளித்தால், நாம் மகிழ்கிறோம். சிலர் நாம் கேட்டால் கொடுக்கின்றனர், சிலர் நாம் கேட்காமலே கொடுக்கின்றனர். இந்த இரண்டு விதத்திலும், கொடுப்பவர் சிலர் சந்தோஷப்படுகின்றனர், ஏற்பவர் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். சாதாரணமாக, ஒரு மனிதருக்கு யாராவது ஒரு குடும்பத்தினரோ, …

Vasundharaநன்றியே சிறந்த மனப்பான்மை