மதிப்பு மரம்
வெறுப்பு என்னும் களைகளை வேறோடு நீக்கி,
மன்னிப்பு என்னும் தண்ணீர் அளித்து,
பெருந்தன்மை என்னும் வெய்யிலில்,
நட்பு என்னும் விதை விதைத்தால்,
அதன் பலனாக மதிப்பு என்னும் மரம் வளரும்.
பின்பு தன்னம்பிக்கை, சுயமரியாதை என்ற கிளைகள் தோன்றி,
நல்லெண்ணங்களான இலைகளும் பரவி,
மகிழ்ச்சி என்னும் மலர்களும்,
மன அமைதி என்னும் நறுமணமும்,
இறையருள் என்னும் கனிகளும் தப்பாது கிடைத்து வரும்.