சகிப்புத்தன்மை எல்லோருக்கும் நல்லது
சகிப்புத்தன்மை என்பது ‘நாமும் வாழலாம், மற்றவரையும் வாழ விடலாம்!” என்ற பொன்மொழியை பின்பற்றுவதாகும். மேலும், சகிப்புத்தன்மை என்பது மற்றொருவரின் நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் புரிந்துக் கொள்வதாகும்; அவற்றை அங்கீகரிக்கவேண்டுமென்றோ பின்பற்றவேண்டுமென்றோ அவசியமில்லை; புரிந்துக் கொண்டு சகித்தால் போதும். வீட்டிலும், மற்றவரை சில சமயம் அவர் விருப்பப்படி செய்ய விடுவதும் சகிப்புத்தன்மை தான்.