உங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்
தவறு செய்தால் தவறொன்றுமில்லை. ஒரு தவறு செய்து விட்டால், பரவாயில்லை. எல்லோரும் தவறு செய்கின்றனர். முதலில் உங்களையே மன்னித்துக் கொள்ளுங்கள். தவறிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், பிறகு கடந்து செல்லுங்கள். தேங்கி நிற்காதீர்கள். கடந்த காலம் இறந்து விட்டது. நடந்தது நடந்து விட்டது. ஒரு தவறு செய்தீர்கள். அதனால் என்ன? அது உலகத்தின் முடிவில்லை! இவையெல்லாம் உங்கள் மன வலிமை மேம்படவே நிகழ்கின்றன. நீங்கள் முன்போலவே தான் இருக்கிறீர்கள்; கொஞ்சம் விவேகமும் வந்துள்ளது, அவ்வளவு தான்.