நன்றியே சிறந்த மனப்பான்மை நாம் அனைவரும் சில சமயம் ஏற்கிறோம், சில சமயம் கொடுக்கிறோம். இப்படி தான் உலக நியதி செல்கிறது. மேலும், சிலர் ஏற்பதை விரும்புகின்றனர், சிலர் கொடுப்பதை விரும்புகின்றனர். இப்படி தான் மனிதர்கள் இருக்கிறார்கள். நமக்கு ஏதாவது தேவைப்படும் போது யாராவது அதை நமக்கு அளித்தால், நாம் மகிழ்கிறோம். சிலர் நாம் கேட்டால் கொடுக்கின்றனர், சிலர் நாம் கேட்காமலே கொடுக்கின்றனர். இந்த இரண்டு விதத்திலும், கொடுப்பவர் சிலர் சந்தோஷப்படுகின்றனர், ஏற்பவர் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். சாதாரணமாக, ஒரு மனிதருக்கு யாராவது ஒரு குடும்பத்தினரோ, …
மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும்
மற்றவர்களுக்கு உதவுவது பலமுறை திரும்பி வரும் தயாள குணம் ஒருவரது சுய தன்மை என்று நீங்கள் சொன்னால், நான் உங்களுடன் ஒத்துக்கொள்கிறேன். பணக்காரரோ ஏழையோ, பெண்களோ ஆண்களோ, உலகில் சிலர் பெருந்தன்மை உள்ளவர், சிலர் இல்லாதவர். உண்மை தான். ஆனாலும் நம்மில் தானம், தருமம் தரக் கூடிய பலர் அப்படி செய்யாததற்குக் காரணம் தானத்தைப் பற்றிய தவறான அபிப்ராயம் உள்ளதாலும், மற்றோருக்கு தாராளமாகக் கொடுப்பதால் வரும் நன்மைகளைப் பற்றி அறியாததாலும், குடும்பத்தின் வழக்கப்படி நடப்பதாலும் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். சுருங்கச் சொன்னால், நமக்கு …