அவர்களின் வெற்றி உன் தோல்வி இல்லை

அவர்களின் வெற்றி உன் தோல்வி இல்லை

Vasundhara மேற்கோள் Leave a Comment

அவர்களின் வெற்றி உன் தோல்வி இல்லை யாராவது ஏதாவது ஒன்றில் வெற்றியடைவதைக் கண்டால், அவர்களுடன் ஒப்பிட்டு ஒருவர் தன்னைப் பற்றி எந்த விதத்திலும் குறைவாக எண்ண வேண்டாம்.  “அவர்களின் வெற்றி எனது தோல்வி இல்லை” என்று அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டால், கவலைப் பட அவசியமே வராது.  

Vasundharaஅவர்களின் வெற்றி உன் தோல்வி இல்லை
Tone down anger t

சினத்தை தணிப்பது நல்லது

Vasundhara மேற்கோள் Leave a Comment

சினத்தை தணிப்பது நல்லது நமக்குப் பிடிக்காதது ஏதாவது நிகழ்ந்தால், நமக்குள் ஒரு கோபம் எழுகிறது. ஒருவர் ஒரு செயல் செய்யாததாலோ அல்லது தவறாக செய்ததாலோ ஏற்பட்ட தொல்லைக்காக அவரைக் குறை கூறுகிறோம்.  நமது சினத்தை நாம் யோசிக்காமல் சிதறியடிக்கும்போது, ஒரு நெருக்கடி நிலையும், சச்சரவும் ஏற்படுகிறது. இந்த சினத்தைத் தணித்துக்கொண்டு, சுட்டிக்காட்டாமல், அமைதியாக இடரை தெரிவித்து, தீர்வையும் அறிவுறுத்தினால், நல்ல பலன் கிடைக்கக் கூடும். மற்றவருடன் நமது உறவும் மேன்மைப் படும். சினத்தைக் கொஞ்சம் தணிப்போம். ஏனெனில் சினத்தால் ஒரு லாபமும் இல்லை. ~ …

Vasundharaசினத்தை தணிப்பது நல்லது
Dont take anyone for granted t

யாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்

Vasundhara மேற்கோள் Leave a Comment

யாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம் நம்மிடம் இனிமையாகவோ, கனிவாகவோ நடந்துக் கொண்டு உதவியும் செய்பவர்களை நாம் அலட்சியமாக எண்ணக்கூடாது. நமக்கு அண்மையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களுடைய பரிவையும் அன்பையும் நாம் புறக்கணிக்கக் கூடாது; அவர்களை நாம் அலட்சியம் செய்யக் கூடாது. உலகில் எதற்கும் அச்சாரம் இல்லை. உங்களுக்கு அன்பளித்து, பராமரித்து, அக்கறை கொள்பவர்களை பாராட்டுவதற்கு சிறிதாவது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

Vasundharaயாரையும் அலட்சியமாக எண்ண வேண்டாம்
Power is not knowledge t

செருக்கு என்பது அறிவு இல்லை

Vasundhara மேற்கோள் Leave a Comment

செருக்கு என்பது அறிவு இல்லை மக்கள் பொதுவாக, ஒருவர் மிகவும் செருக்குடனும், தான் வலிமையுள்ளவர், உயர்ந்தவர் என்ற நினைப்புடனும் நடந்துக்கொண்டால், அவர் மிகவும் அறிவாளி என்று நினைக்கின்றனர். ஆனால், ஒருவர் நயமாக, இனிமையாக நடந்துக் கொண்டால், அவருக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கின்றனர். இவை தவறான கருத்துக்கள். அறிவு வலிமையாகும் என்பது உண்மைதான். ஆனால், வலிமை அல்லது செருக்கு அறிவாகாது.  

Vasundharaசெருக்கு என்பது அறிவு இல்லை
Break up gently t

அன்பு உறவின் முடிவில் மென்மை வேண்டும்

Vasundhara மேற்கோள் Leave a Comment

அன்பு உறவின் முடிவில் மென்மை வேண்டும் நீங்கள் ஒருவருடன் அன்பு உறவை முடிக்க விரும்பினால், அதை மென்மையாகச் செய்யுங்கள். உங்களுக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும், வெறுக்க என்ன காரணங்கள் இருந்தாலும், மன விஷத்தை அவர் மீது சிதறாதீர்கள். ஏனெனில், ஒருவேளை உண்மையில் நல்லவரான  ஒருவரை மிக ஆழ்ந்து வருந்தும் வகையில் நீங்கள் துன்புறுத்தலாம். மேலும்…..மற்றவருக்கு நீங்கள் அளிப்பது மீண்டும் ஒரு காலத்தில் உங்களுக்கே வந்து சேரும். 

Vasundharaஅன்பு உறவின் முடிவில் மென்மை வேண்டும்
Forgive yourself t

உங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்

Vasundhara மேற்கோள் Leave a Comment

உங்களை மன்னித்துக் கொள்ளுங்கள் தவறு செய்தால் தவறொன்றுமில்லை. ஒரு தவறு செய்து விட்டால், பரவாயில்லை. எல்லோரும் தவறு செய்கின்றனர். முதலில் உங்களையே மன்னித்துக் கொள்ளுங்கள். தவறிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், பிறகு கடந்து செல்லுங்கள். தேங்கி நிற்காதீர்கள். கடந்த காலம் இறந்து விட்டது. நடந்தது நடந்து விட்டது. ஒரு தவறு செய்தீர்கள். அதனால் என்ன? அது உலகத்தின் முடிவில்லை! இவையெல்லாம் உங்கள் மன வலிமை மேம்படவே நிகழ்கின்றன. நீங்கள் முன்போலவே தான் இருக்கிறீர்கள்; கொஞ்சம் விவேகமும் வந்துள்ளது, அவ்வளவு தான்.

Vasundharaஉங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்
Good or bad mind t

நல்லவர் கெட்டவர் யாரும் இல்லை

Vasundhara மேற்கோள் Leave a Comment

நல்லவர் கெட்டவர் யாரும் இல்லை நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் இரண்டு வித மனிதர்கள் இல்லை. மனதில் கெட்ட எண்ணங்கள் இருக்கும்போது, மனம் கெட்டதாகிறது. மனதில் நல்ல எண்ணங்கள் இருக்கும்போது, மனம் நல்லதாகிறது. 

Vasundharaநல்லவர் கெட்டவர் யாரும் இல்லை
God is same for all t

கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான்

Vasundhara மேற்கோள் Leave a Comment

கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான் கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். காணும் விதம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் முதன்மையான உணர்வு அன்பு தான். குறிக்கோள் சந்தோஷமும் மன அமைதியும் தான்.

Vasundharaகடவுள் எல்லோருக்கும் ஒன்று தான்
Rejection is God's protection t

நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு

Vasundhara மேற்கோள் Leave a Comment

நிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு நீங்கள் நேசிக்கும் ஒருவர் உமது இதயத்தை உடைத்தால், அது இந்த தொடர்பில் பிறகு வரக்கூடிய பெருந்துன்பத்திலிருந்து கடவுள் உமக்கு அளிக்கும் பாதுகாப்பு என்று புரிந்துக் கொள்ளுங்கள். நிராகரிப்பு சில சமயம் மாறுவேடத்தில் வரும் ஆசியாகும்.

Vasundharaநிராகரிப்பு கடவுளின் பாதுகாப்பு
Don't compare with others t

மற்றவருடன் நம்மை ஒப்பிடக் கூடாது

Vasundhara மேற்கோள் Leave a Comment

மற்றவருடன் நம்மை ஒப்பிடக் கூடாது நாம் நம்மை ஒருபோதும் மற்றவருடன் ஒப்பிடக்கூடாது. வாழ்க்கையில் எப்போதும் நம்மை விட சிலர் மேம்பட்ட நிலையில் இருப்பார்கள், சிலர் தாழ்வான நிலையில் இருப்பார்கள். மற்றவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம், கற்றுக்கொள்வது நல்லதுமாகும். ஆனால் நமது வெற்றியையும் தோல்வியையும் மற்றவர்களை வைத்து நாம் அளவிடக் கூடாது. நாம் நமது திறமைகளுக்கும் ஆற்றல்களுக்கும் ஒப்பாக வாழ்கிறோமா என்று தான் அளவிட வேண்டுமே தவிர, மற்றவர்களின் வாழ்வில் நடப்பதைக் கொண்டு நாம் நம்மை அளவிடக் கூடாது.

Vasundharaமற்றவருடன் நம்மை ஒப்பிடக் கூடாது

நம்மையே நேசிப்பது

Vasundhara மேற்கோள் Leave a Comment

நம்மையே நேசிப்பது மற்றவர்களுடைய ஒப்புதலும் மற்றவர்கள் நம்மை விரும்புதலும் நமக்கு ஒரு சுகமான உணர்ச்சியை தருகிறது. ஆனால் சந்தோஷமான வாழ்க்கைக்கு இவை கட்டாயமும் இல்லை, இன்றியமையாதவையும் இல்லை. பிறத்தியார் நம்மை அங்கீகரித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும், அதனால் நாம் குறைவதும் இல்லை, மேம்படுவதும் இல்லை. முக்கியமானது என்னவென்றால், நாம் நம்மையே நேசிப்பதும் அங்கீகரிப்பதும் தான். இதை நாம் சாதித்து விட்டால், மற்றவர்களுடைய ஒப்புதலுக்காக நாம் அவதிப் பட வேண்டிய அவசியமில்லை.

Vasundharaநம்மையே நேசிப்பது
You are fine as you are t

நீங்கள் உள்ளபடியே சிறப்பாகத் தான் இருக்கிறீர்கள்

Vasundhara மேற்கோள் Leave a Comment

நீங்கள் உள்ளபடியே சிறப்பாகத் தான் இருக்கிறீர்கள் வசிக்கும் இடத்தையும், மதத்தையும், உடைகளையும், தோற்றத்தையும் மாற்றுவதால் ஒருவருக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் உண்டாகாது.  இயல்பாக உள்ள தமது தன்மை போதுமானதல்ல என்ற தவறான நோக்கத்தை மனதிலிருந்து நீக்குவதால் தான் இவை இரண்டும் ஏற்படும். 

Vasundharaநீங்கள் உள்ளபடியே சிறப்பாகத் தான் இருக்கிறீர்கள்